ஜப்பான் ஓவியர் திரு .ஹிரொயொஷி தகெத மதுரை சுற்றுலா அலுவலகம் வந்தார் .



ஜப்பான் ஓவியர் திரு .ஹிரொயொஷி தகெத மதுரை சுற்றுலா அலுவலகம் வந்தார் .இவர் ஒரு ஓவியர் பார்த்த ஒரு நிமிடத்தில்   என்னை வரைந்தார் . தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறார் .தமிழ் பேசுகிறார். காந்தியடிகள் மகாகவி பாரதிக்கு வரைந்த   மடலில் தமிழில் கையொப்பம் எழுதியது போல இவரும்  தன்  பெயரை  தமிழில் எழுதினார் .இவர் நடிகர் ரஜினி காந்த் ரசிகர் அவரை சந்தித்து எடுத்த படத்தை அலைபேசியில் வைத்து இருந்தார் . .ஹைக்கூ கவிதைகள் விரும்பி படிப்பேன் என்றார். எனது ஹைக்கூ கவிதைகள் இணையம் முகவரி தந்தேன் .மனம் மகிழ்ந்தார் .ஜப்பானியர் தமிழை நேசிகின்றனர் .தமிழர்கள்தான்  தமிழை நேசிக்க யோசிக்கின்றனர்.




கருத்துகள்