நச் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !



நச் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !

அடிப்படைத் தேவைகள் 
பூர்த்தியாகாமல் 
ஏவுகணைகள் ஏவி என்ன பயன் ?

தலையில் இடுப்பில் மட்டுமல்ல 
வாரிசின் வசமும் 
தண்ணீர்க்குடம் !

கண்டுபிடித்தவருக்கு 
நன்றி 
நெகிழி ( பிளாஸ்டிக் )  குடம் !

சுமையை சுமையாக 
எண்ணாத 
சுமங்கலி !

வருத்தமின்றி 
பாரம் சுமக்கும் 
குடும்பம் !

குடங்கள் 
சுமந்த போதும் 
மாறாத புன்னகை !

வான் மழை பொய்த்தது
வந்தது 
தண்ணீர் பற்றாக்குறை !

காணவில்லை 
வானத்தை வில்லாய்  
வளைப்போம் என்றவர்களை !

வாக்குக் கேட்டு இனி 
வரட்டும் 
வாய்ச்சொல் வீரர்கள் !

தேனும் பாலும் 
ஓடுமென்றனர்
தண்ணீர் கூட வரவில்லை  !  

  
.

கருத்துகள்