அன்பிற்குரியீர்!

அன்பிற்குரியீர்!
                  வணக்கம். புதிய மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் புதிய மனிதன் - நுகர்வியத்தை வெறுத்தொதுக்கி சக மனிதனின் கண்ணீர் துடைக்கும் ஒப்புரவு, எதிரி என்றாலும் அவரையும் கண்ணியமாகவும் மாந்தநேயத்தோடும் நடத்தும் அறம், கேள்விக்கு சொல்லித்தரப்படும் விடையைக் கேள்விக்குட்படுத்தும் அறிவாற்றல், அறிவை ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் உயர்நோக்கம் கொண்டவராய்  இருக்க வேண்டும். இதைச்  சாதிக்க தமிழால்தான் முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்படி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பெருநோக்கத்தோடுதான் எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறோம். உழைப்பை மட்டும் நம்பி, மக்கள் சார்ந்து இந்தப்  பணியை செய்து வருகிறோம். ஏழைகளான எங்களின் இந்தப் பெருங்கனவின் செயல்வெற்றிக்கு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டுகிறேன்.
                                                                             - வே.பாரதி,
                                                                               செயலாளர் 
                                                               தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி,
                                                            கள்ளிப்பாளையம்புதூர், பொள்ளாச்சி 
                                                                         9865107107


கருத்துகள்