இதுவும் கடந்து போகும் ! கவிஞர் இரா .இரவி !

இதுவும் கடந்து போகும் !     கவிஞர் இரா .இரவி !
இன்னலுக்காக வாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

கவலையில் கரைய வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

சோகத்தில் சோர வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

எழ்மைக்காக வருந்த வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

வறுமைக்காக வாடிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

தோல்விக்கு துவண்டிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

விரக்தி வேதனை வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

விடியவில்லை  என்று வருந்த  வேண்டாம் ! 
இதுவும் கடந்து போகும் !

ஆதிக்கத்திற்கு அஞ்ச வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

ஆர்பாட்டத்திற்கு மயங்க வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் ! 

ஆடம்பரத்திற்கு மிரள வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

வெற்றிக்கு வீர வசனம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

புகழ் போதையில் கூத்தாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

பதவி  ஆணவத்தில்  ஆட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

நானே பெரியவன்  எண்ணம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !

நிலையற்ற உலகில் எதுவும் நிரந்தரமன்று  !
நிதம் அன்பு செலுத்தி வாழ்வாங்கு வாழ் !





நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்