தீண்டாதே என்றும் மது ! கவிஞர் இரா .இரவி !

தீண்டாதே என்றும் மது !  கவிஞர் இரா .இரவி !

அறிவை இழக்க வைக்கும் மது !
ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும்  மது ! 
     
ஆற்றலை அழிக்கும்  மது !
ஆண்மையை குறைக்கும் மது !

தடுக்காமலே விழ வைக்கும்  மது !
தள்ளாடி விழ வைக்கும்  மது !

தரத்தை போக்கிவிடும் மது !
தன்மானம் இழக்க வைக்கும் மது !

பணத்தைப் பறிக்கும்  மது !
பண்பாட்டைச் சிதைக்கும் மது !

கேட்டை விளைவிக்கும் மது !
கேடுகெட்ட செயல் செய்யும் மது !

மதியை மயக்கிடும் மது !
மானம் கெட வைக்கும் மது !

பாதையைத் தவறாக்கும் மது !
போதையால் மூடனாக்கும் மது !

குடும்பத்தைப் பிரிக்கும் மது !
குழந்தைகள் வெறுக்கும் மது !

சோகத்தில் ஆழ்த்தும்   மது !
சோம்பேறி ஆக்கும்  மது !

சினம் கூட்டிடும் மது !
சிந்தையை சீரழிக்கும் மது !

வாழ்நாளைக் குறைக்கும் மது !
வளங்களை அழிக்கும் மது !

வஞ்சியர் வெறுக்கும் மது !
வாஞ்சையை நீக்கும் மது !

குடலை அரிக்கும் மது !
கூனிக் குறுக வைக்கும் மது !

விவேகத்தை  வீணடிக்கும் மது !
வீரத்தை குறைக்கும் மது !

நண்பனை பகைவனாக்கும் மது !
நட்பை முறித்திடும் மது !

நல்லவனை கெட்டவனாக்கும் மது !
நல் வழி மாற்றிடும் மது !

நலத்திற்குக் கேடு மது !
நீதி தவறிட வைக்கும்  மது !

முன்னேற்றத்தின் தடை மது !
முயற்சியை முறிக்கும் மது !

சாதனையின் பகைவன் மது !
சாத்தானின் நண்பன் மது !

தீங்கினும்   தீங்கு மது !
தீண்டாதே என்றும் மது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்