இலை ! கவிஞர் இரா .இரவி !

இலை !    கவிஞர் இரா .இரவி !





மரத்தில் இருக்கும்வரை
மரணம் இல்லை !

மரம் விட்டு உதிர்ந்ததும்
மரணம் தொடங்கும் !

உதிர்வதுண்டு தானாகவும்
உதிர்ப்பதுண்டு காற்றும் ! 

நிலத்திலும் விழுவதுண்டு
நீரிலும் விழுவதுண்டு !

நெருப்பிலும் விழுவதுண்டு
நெஞ்சம் கனப்பதுண்டு ! 

சிலர் பறித்தும் பிரிவதுண்டு
சிந்திக்காமலும் பிரிவதுண்டு !

ஆணவத்திலும்   பிரிவதுண்டு
அன்பின்றிப் பிரிவதுண்டு !

இலை என்ற பெயரும்
இனி சருகு என்றாகும் !

உருக்குலைந்து போகும்
உரமாகவும் மக்கும் !

பெற்றோருடன்   வாழும் வாழ்க்கை
பாதுகாப்பானது என்றும் !

பிரிய நேர்ந்தாலும்
பாசம் காட்டி வாழுங்கள் !

மரம் இன்றி இலை இல்லை
பெற்றோர் இன்றி பிள்ளை  இல்லை !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்