நேயம் ஒன்றே நெஞ்சுயர்த்த வைக்கும்! கவிஞர் இரா. இரவி !

நேயம் ஒன்றே நெஞ்சுயர்த்த வைக்கும்! கவிஞர் இரா. இரவி !

மனநலம் குன்றிய குழந்தைகள் ஓட்டப்பந்தயம் !
மற்றகுழந்தை விழுந்த போது எழுந்திட உதவிய உள்ளம் !
மனிதனுக்கு இருக்க வேண்டியது மனிதநேயம் !
மனித நேயம் இருந்தால் தான் அவன் மனிதன் !
மரித்த பின்னும் வாழ உதவும் மனிதநேயம் !
மக்கள் மனங்களில் வாழ உதவும் மனிதநேயம் !
அன்னை தெரசா இன்றும் வாழக் காரணம் மனிதநேயம் !
அப்துல் கலாம் இன்றும் வாழக் காரணம் மனிதநேயம் !
அன்னை தெரசாவின் தொழுநோயாளிகள் நேசிப்பு மனிதநேயம் !
அப்துல்கலாமின் மாணவர்கள் நேசிப்பு மனிதநேயம் !
வறியவர்களுக்கு உதவிடும் உள்ளம் மனிதநேயம் !
வசதியானவர்களுக்கு அவசியம் வேண்டும் மனிதநேயம் !
உடல் காயத்திற்கு மருந்திடுவது மனிதநேயம் !
உள்ளக் காயத்திற்கு மருந்திடுவதும் மனிதநேயம்!
குருதிக்கொடை வழங்கி மகிழ்வது மனிதநேயம் !
விழிக்கொடை எழுதி வைப்பதும் மனிதநேயம் !
உடல் தானம் வழங்குவதும் உன்னத மனிதநேயம் !
உயர்ந்த உள்ளம் கொண்டு உதவுவது மனிதநேயம் !
சக மனிதனின் கண்ணீர் துடைப்பது மனிதநேயம் !
சகோதரனாக எல்லோரையும் நினைப்பது மனிதநேயம் !
சாதிச் சண்டைகளைத் தடுத்து நிறுத்துவது மனிதநேயம் !
மதச்சண்டைகளை ஒழித்துக் கட்டுவது மனிதநேயம் !
மனிதனை மனிதனாக வாழ வைப்பது மனிதநேயம் !
மனிதநேயம் ஒன்றே நெஞ்சுயர்த்த வைக்கும்.!

கருத்துகள்