ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்ரியு !  கவிஞர் இரா .இரவி !
செத்துப் போனது
சாதி மத பேதம்
மழை வெள்ளம் !

மரிக்கவில்லை மனிதநேயம்
மெய்ப்பித்தது
மழை !

கொண்டாடு
திருவிழா போல
வாழ்க்கை !

முடிந்து விடுகிறது
தோற்றம் மறைவோடு
சராசரி வாழ்க்கை !  

நண்பன் இல்லாவிடினும்
பகைவன் இன்றி வாழ்
இனிக்கும் வாழ்க்கை ! 

பெண் பிறந்தால்
பேதலிக்கும்
பெண்கள் ?

உலகிற்கு உழைத்தவனும்
இளைத்தவனும்
தமிழன் !

கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம் !  


இன்பத்தின் காரணி
பணமன்று
மனம் !

வழிவகுக்கும்
மன நிம்மதிக்கு
மவுனம் !

பெரிய மனிதர்களின்
சிறந்த பண்பு
விட்டுக் கொடுத்தல் ! 

உறுதியாகின்றது
உழைப்பாளிக்கு
உறக்கம் !

அரிதிலும் அரிது
கணவனைப் பாராட்டும்
மனைவி !

வரலாம் தோல்வி
இறுதி வெற்றி
உண்மைக்கே !

அறியவில்லை யாரும்
அவள்  அழுததை
மழை !

நல்ல கனவு
கலைத்தது
கொசு !

பிடிக்காமல் ரசியுங்கள்
பார்ப்பதே பரவசம்
பட்டாம்  பூச்சி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்