தலைப்பு தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ! தலைப்பு ; கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

தலைப்பு தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத்   தென்னவன் !
தலைப்பு ;
கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால்
இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி !

உயிர்  எழுத்து மெய் எழுத்து  உயிர்மெய் எழுத்து
உயிர்  எழுத்தாகக் கொள்வோம் என்பது மெய்யே !

ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !

எழுத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை தமிழில்
ஏன் ? எதற்கு ? பிறமொழி எழுத்துக்கள் சிந்திப்பீர் !

வடமொழி எழுத்துக்களைக் கலப்பதை நிறுத்திடுவோம்
வண்டமிழை கலப்பின்றி வளர்த்திடுவோம் !

தமிழ்மொழியில் ஒரேழுத்துக்கும் பொருள் உண்டு
தமிழ்மொழி போல வேறுமொழிக்கு சிறப்பு இல்லை !


வறுமையில் வாடுபவன் கடன் வாங்கலாம்
வளமான தமிழுக்கு பிறமொழிக்கடன் வேண்டாம் !

உணவில் கலப்படம்  உயிர்க்குக் கேடு
உன்னத மொழியில் கலப்படம் தமிழுக்குக் கேடு !

படிக்காத பாமரர்கள் பிறமொழி எழுத்து உச்சரிப்பதில்லை
படித்த பண்டிதர்கள்தான் பிறமொழி எழுத்தை எழுதுகின்றனர் !

படிக்காத கிராமத்தினர் ராசா ரோசா என்கின்றனர்
படித்தவர்கள்தான் ராஜா ரோஜா என்கின்றனர் !

உலகின் முதல்மொழி தமிழ்மொழி அறிந்திடுக
உலகப் பொதுமறை தந்தமொழி நம் தமிழ் !

தமிழ் மொழியின் பெருமையைக் காத்திடுவோம்
தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்திடுவோம் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்