- நன்றி . தினமணி இணையம்

- நன்றி  . தினமணி இணையம்
http://www.dinamani.com/kavithaimani/2016/03/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.-%E0%AE%87%E0%AE%B0/article3326724.ece
--

பாதச்சுவடுகள்: கவிஞர் இரா. இரவி

By dn
First Published : 14 March 2016 11:17 AM IST
கடற்கரையில் உள்ள பாதச்சுவடுகள்
காதலர்கள் வந்து போனதைப் பறை சாற்றுகின்றன !
இரண்டு கால்களின் பாதச்சுவடுகளும்  ஒன்று 
இரண்டு காதலர்களின்  எண்ண அலைகள் ஒன்று  !
கடற்கரை வந்து கரம் பிடித்தோர் உண்டு
கரம் பிடிக்க முடியாமல் பிரிந்தோர் உண்டு  !
திட்டமிட்டு பிரிந்திட்ட காதலர்கள் உண்டு
திட்டமிட்டு இணைந்திட்ட காதலர்கள் உண்டு !
இருவராக இணைந்தே வந்தவர்கள்  உண்டு
இருவர் ஒருவராகி வந்து செல்வதும் உண்டு !
ஊடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு
உடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு !
பாதச்சுவடுகள் பார்க்க அழகாக இருந்தாலும்
பெரும் காற்று வந்து கலைப்பதும் உண்டு !
கடல் கரையோரத்து பாதச்சுவடுகளை
கடல் அலைகள் வந்தும் அழிப்பது உண்டு !
காதலர்களின் பாதச்சுவடுகள் மட்டுமல்ல
கடலை சுண்டல் விற்கும் பாதச்சுவடுகள் உண்டு !
கல்வெட்டு போல பதிந்தவைகள் உண்டு
காற்றால் அழிந்தவைகள் உண்டு !
வாழ்க்கை நிரந்தரமன்று என்ற வாழ்வியலை
வந்து போனவர்களின் பாதச்சுவடுகள் உணர்த்துகின்றன

கருத்துகள்