பிடித்த பாடல் !கவிஞர் இரா .இரவி ! நன்றி . கவிஞர் கண்ணன் சேகர்

பிடித்த பாடல் !கவிஞர் இரா .இரவி !
நன்றி . கவிஞர் கண்ணன் சேகர் .


கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் . மயக்கமா ? கலக்கமா ? காரணம் காவியக் கவிஞர் வாலி திரைப்படத்திற்கு   முயற்சி செய்து தோல்வி கண்டு விரக்தியில் சொந்த ஊருக்கு   சென்று விடலாம் என்று முடிவு எடுத்தப்  போது ,இந்தப் பாடல் கேட்டு முடிவைக் கைவிட்டு தொடர்ந்து முயற்சி  பாட்டு எழுதி மூன்று  தலைமுறைக்கு பாட்டு எழுதி காவிய  கவிஞராக உயர்ந்தார் .
ஒரு பாடல் என்ன செய்யும் என்பதற்கு இது உதாரணம் .இப்படி பல பாடல்கள் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்றம் விளைவித்தது உண்மை .

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி 
நினைத்துப்   பார்த்து நிம்மதி நாடு ."

நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டு பலர் நிம்மதி இழந்து விரக்தியில் தற்கொலை வரை  செல்கின்றனர். கவியரசர் எழுதியது போல நமக்கு கீழே உள்ளவர்களைப் பார்த்துஆறுதல் அடைய வேண்டும் எனக்கும் கவலைகள் உண்டு .உலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கவலைகள் உண்டு.ஆனால் கவியரசரின் இந்தப் பாடல் கேட்டால் கவலை காணமல் போகும் என்று  உறுதி கூறலாம் கேட்டுப் பாருங்கள் நீங்கள் .நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .  
.

கருத்துகள்