நன்றி . தினமணி இணையம்

http://www.dinamani.com/kavithaimani/2016/03/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/article3314670.ece

-- நன்றி  . தினமணி இணையம் 

துணையாய் தொடரும் நிழல்கள்:

 கவிஞர் இரா .இரவி

By dn
First Published : 07 March 2016 10:13 AM IST
துணையாய் தொடரும் நிழல்கள்அவள் நினைவுகள் !
தோழியாய் இருந்து காதலியாக மாறினாள் !
கடவுள் உண்டு என்று அவள் வாதிட 
கடவுள் இல்லை  என்று நான் வாதிட !
வாதத்தில் தொடங்கி வசந்தத்தில் முடிந்தது 
வஞ்சி அவள் என்னைக் காதலித்தாள் !
எனக்கு என்ன பிடிக்கும் அவள் கேள்வி 
உனக்கு என்ன பிடிக்கும் என்  கேள்வி !
எனக்குப் பிடித்தவை அவளுக்கும் பிடித்தன 
அவளுக்குப் பிடித்தவை எனக்கும் பிடித்தன !
ஒரே நேர்கோட்டில் இருவரும் பயணித்தோம் 
ஒரே வாழ்வு இருவர் வாழ முடிவெடுத்தோம் !
வழக்கம் போல வந்தது காதலுக்குத் துன்பம் 
வஞ்சியைப் பிரித்தார்கள் என்னிடமிருந்து !
எல்லாக்  காதலும் எல்லோராலும் ஏற்கப்படுவதில்லை
ஏதோ ஓரிரு காதலே திருமணத்தில் முடிகின்றன !
காதல் தோல்வி என்னுள் கவிதை வளர்த்தது 
காதலி நினைவாக கவிதைகள் பெருகியது
.மூளையின் ஒரு ஓரத்தில் நிரந்தர இடம் 
மங்கை அவள் பிடித்திருப்பது உண்மை !
பேச்சு வாரத்தை எங்களுக்குள் இல்லாவிடினும் 
பசுமையான நினைவுகள் மட்டும் மறக்கவில்லை !
பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள் 
பசுவினைப் போல அவ்வப்போது அசைபோடுகின்றேன் !
உண்மையான காதலுக்கு அழிவில்லை உண்மை
உள்ளத்துள் உயர்ந்த இடம் என்றும் உண்டு !
என் கவிதைகளின் முதல் ரசிகை அவள் 
என்னுள் கவிதை விதை விதைத்த விவசாயி !
இருவரும் பிரிந்து பல்லாண்டுகள் ஆனபோதும் 
எங்களுக்குள் தொடரும்  நிழலாய்  நினைவுகள் !

கருத்துகள்