தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !
"பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி !

பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்
பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் !

கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்
கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் !

உரைத்த  சொற்களுக்கு ஒரு  பொருள் உண்டு
உரைக்காத சொற்களுக்கு ஓராயிரம் பொருள் உண்டு !

உதடுகள் உச்சரிக்காவிடினும் கண்கள் பேசும்
ஒரே ஒரு பார்வையில் சுருட்டி விடுவாள் !

வெளியில் மெளனமாகத் தோன்றினாலும்
வீட்டில் புயலாக மாறுவதும் உண்டு !

பேசாத மெளனமும் பேசும் பலவற்றை
பேசியதாகக் கருதி செயல்பட வேண்டும் !

பேசியபோது சொன்னவைகளை நினைத்து
பேசாதபோது நடைமுறைப் படுத்த வேண்டும் !

உன்னோடு "கா " என்று சொல்லிவிட்டால்
ஒரு வேலையும் ஓடாது நமக்கு !

ஊடலை வெளிப்படுத்தும் ஆயுதம் மெளனம்
கூடலுக்கு  மெளனம்  கலைப்பது அவசியம் !

பேசாவிட்டால் போகட்டும் என்று இருந்தால் 
பேசிக் கொள்வோம் நமக்கு நாமே !

மகிழ்வான வாழ்விற்கு மெளனம்  தேவையன்று
மனம் விட்டு பேசினால் ஊடல் ஒழியும் !

சில நேரங்களில் மட்டும்  மெளனம் நன்மை தரும்
பல நேரங்களில் மெளனம் தீமையே  தரும் !

அவள் கோபத்தில் கத்தினால் திருப்பி நாமும்
அவளுடன் கத்தாமல் மெளனம் காப்பது சிறப்பு !
.



--


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்