நன்றி .தினமணி இணையம் ! . பேசும் மெளனம்: கவிஞர் இரா .இரவி

நன்றி .தினமணி இணையம் !


.
பேசும் மெளனம்: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 25 April 2016 08:37 AM IST
Tweet
பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்
பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் !
கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்
கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் !
உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டு
உரைக்காத சொற்களுக்கு ஓராயிரம் பொருள் உண்டு !
உதடுகள் உச்சரிக்காவிடினும் கண்கள் பேசும்
ஒரே ஒரு பார்வையில் சுருட்டி விடுவாள் !
வெளியில் மெளனமாகத் தோன்றினாலும்
வீட்டில் புயலாக மாறுவதும் உண்டு !
பேசாத மெளனமும் பேசும் பலவற்றை
பேசியதாகக் கருதி செயல்பட வேண்டும் !
பேசியபோது சொன்னவைகளை நினைத்து
பேசாதபோது நடைமுறைப் படுத்த வேண்டும் !
உன்னோடு "கா " என்று சொல்லிவிட்டால்
ஒரு வேலையும் ஓடாது நமக்கு !
ஊடலை வெளிப்படுத்தும் ஆயுதம் மெளனம்
கூடலுக்கு மெளனம் கலைப்பது அவசியம் !
பேசாவிட்டால் போகட்டும் என்று இருந்தால்
பேசிக் கொள்வோம் நமக்கு நாமே !
மகிழ்வான வாழ்விற்கு மெளனம் தேவையன்று
மனம் விட்டு பேசினால் ஊடல் ஒழியும் !
சில நேரங்களில் மட்டும் மெளனம் நன்மை தரும்
பல நேரங்களில் மெளனம் தீமையே தரும் !
அவள் கோபத்தில் கத்தினால் திருப்பி நாமும்
அவளுடன் கத்தாமல் மெளனம் காப்பது சிறப்பு !
http://www.dinamani.com/kavithaimani/2016/04/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%C2%A0-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87/article3399002.ece
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்