படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

ஐந்தில்  வளையாதது 
ஐம்பதில் வளையாதாம்
இப்போதே வளைக்கிறேன் ! 

முயற்சி திருவினையாக்கும் 
முயல்கிறேன் 
உறுதியாக  வரும் !

குடிசையில் இடமில்லை 
கிடைத்த இடத்தில 
உடற்ப்பயிற்சி !
   
மழை பொழியவில்லை 
இப்படியே நீர் பாய்ச்சி 
விளைவிப்பேன் பயிர்களை !

அடித்துப் பார்த்தேன் வரவில்லை 
தொங்கிப் பார்த்தேன் வரவில்லை 
ஆனாலும் விடுவதாகயில்லை !   


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்