நன்றி தினமணி கவிதை மணி .அலைகளின் தாகம்: கவிஞர் இரா .இரவி

http://www.dinamani.com/kavithaimani/2016/06/19/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87%E0%AE%B0/article3490017.ece

-- 

அலைகளின் தாகம்: கவிஞர் இரா .இரவி

By dn
First Published : 19 June 2016 02:51 PM IST

கடலைக் கடந்து விடலாமென்று
கடல் அலைகள் முயலுகின்றன !
கடக்க முடியாமல் தோற்றுப்போய் 
கடலுக்கு திரும்பி விடுகின்றன !
தோல்வி பற்றிய கவலைகள் 
துளியுமின்றி அலைகள்அ லைகின்றன !
என்றாவது ஒருநாள் கடப்போம் 
என்ற நம்பிக்கையில் வருகின்றன !
பாறைகளிலும் முட்டி மோதுகின்றன 
பயணம் முடிவின்றித் தொடர்கின்றன !
அலைகளின் தாகம் கடல் அறியவில்லை 
அறிந்திருந்தால் ஆறுதலாகி  இருக்கும்  !
கடலில் வாழ்ந்தாலும் அலைகளுக்கென்று 
கனவும் ஏக்கமும் தாகமும் உண்டு !
கடல் தன்னில் வாழும் அலைகளை 
கட்டாயம் கடல் மதித்திட வேண்டும் !
எதோ ஒரு ஏக்கத்தின் காரணமாகவே 
எப்போதும் அலைகள் ஏங்கி வருகின்றன !
அலைகள் இல்லாத கடலும் உண்டு 
அலைகள்தான் கடலுக்கு அழகு !
முயற்சி திருவினையாக்கும் என்ற 
முக்கியமான குறளுக்கு எடுத்துக்காட்டு !
ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள் 
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்

கருத்துகள்