வெள்ளை என்றால் உயர்வு என்றும்
கருப்பு என்றால் தாழ்வு என்றும் !
தவறான கற்பிதம் செய்து வைத்துள்ளனர்
தனக்குத்தானே சிலர் கர்வம் கொள்கின்றனர் !
ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்திடும்
ஆணாதிக்கம் போன்ற தவறான கற்பிதம் !
மலர்களில் பல வண்ணங்கள் உண்டு
மனிதர்களில் பல வண்ணங்கள் உண்டு !
உயர்வு தாழ்வு நிறத்தில் இல்லை
உலக மனிதர் யாவரும் சமம் !
வெள்ளை என்பதால் கர்வம் வேண்டாம்
கருப்பு என்பதால் கவலை வேண்டாம் !
கேரளாவில் வெள்ளை முகப்பெண் ஒருத்தி
கறுப்புமைப் பூசி விழிப்புணர்வு விதைக்கிறாள் !
வண்ணங்களின் மீது தவறான எண்ணங்கள்
வைத்து வாழ்ந்து வந்தது போதும் !
விருப்பு வெறுப்பின்றி வண்ணம் மதிப்போம்
வண்ணங்களை விட எண்ணங்களே முக்கியம் !
கருப்பு என்றால் குறை என்ற எண்ணம் வேண்டாம்
வெள்ளை என்றால் நிறை என்ற எண்ணம் வேண்டாம் !
ரசித்துப் பார்த்தால் கருப்பு அழகுதான்
ரசனையில் மாற்றம் விரைவில் வேண்டும் !
தவறான புரிதல் இனியும் வேண்டும்
தவறான கற்பிதம் நக்கும் வேண்டாம் !
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக