திரு.புதுவை. சீனு தமிழ்மணி வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா .இரவி !

திரு.புதுவை. சீனு தமிழ்மணி வாழ்க பல்லாண்டு !
கவிஞர் இரா .இரவி !

திரு.புதுவை. சீனு தமிழ்மணி அரசுப்பணியில் இருந்த போதும் கொளகையில் சமரசம் செய்து கொள்ளாதவர். மனதில்   பட்டத்தை பட்டென உரைப்பதிலும் எழுதுவதிலும் அவருக்கு நிகர் அவரே .உலகில் ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக  தமிழைக்  காப்பதில் , தமிழ்இன உணர்வுடன்   இருப்பதில் புதுவைத் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர் .புதுவை என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது புரட்சிக்கு கவிஞர் பாரதி தாசன், புதுவைத் தமிழ் நெஞ்சன் ,புதுவை. சீனு தமிழ்மணி மூவரும்தான் .தங்கள் பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்ட சகோதரர்கள் .


துளிப்பாவை முன்னெடுத்து சென்ற முன்னோடி .கரந்தடி துளிப்பா இதழ் மூலம் பலருக்கு துளிப்பாவைப் பயிற்றுவித்தவர் .வடமொழிச் சொல் இன்றி இன்றும் என்றும் தூய தமிழ்ச் சொல் பயன்படுத்து வருபவர் .அவரது  உச்சரிப்பிலும் வடசொல் வரவே வராது .அவரது பேச்சும் எழுதும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பாடம். அரசுப்பணியில் இருந்தபோதும் எந்தவித  அச்சமுமின்றி கொண்ட கொள்கையில் கொன்றாய் நிற்பவர் .கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர் என்பதால் மூட நம்பிக்கைகளை   சாடி துளிப்பா பல எழுதி ,பகுத்தறிவு   விதை விதைத்தவர் .

தமிழினப் பகைவர்கள்  அஞ்சும்படி பல படைப்புகள் படைத்தவர் ."பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்". என்ற விளம்பர மொழி போல திரு.புதுவை. சீனு தமிழ்மணி என்றாலே அவர் எழுதிய அற்புதமான துளிப்பா நினைவிற்கு வரும் .அவரது நூலிற்கு விரிவான மதிப்புரை இணையங்களில் எழுதி உள்ளேன் .ஹைக்கூ என்ற சொல்லைக்  கூட பயன்படுத்தாமல் துளிப்பா என்றே எழுதி வருபவர் . 


திரு.புதுவை. சீனு தமிழ்மணி அவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர் அவரது  படைப்புகளில் இயற்கை நேசம் சப்பானியக் கவிஞர்களை விஞ்சும் அளவிற்கு இருக்கும் .நெகிழிப் பைனின்   தீமைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே பாடல்கள் வடித்தவர் .சமூக நீதிக்காக என்றும் குரல் கொடுத்து வருபவர் .தன் வீடு தன் குடும்பம்  என்று சுருங்கி விடாமல் ,சராசரி வாழ்வு வாழாமல் சாதனை வாழ்க்கை  வாழ்பவர்  .போது நலனில் ஈடுபாடு மிக்கவர் .பலருக்குப் பாடமாக  வாழ்பவர்  .படைப்பிற்காக பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்றவர் .தலையில் எதையும் ஏற்றுக் கொள்ளாத எளியவர் .இனியவர் .


அரசுப்பணியில்  இருந்து ஓய்வு பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துகள் .விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவி போல இன்னும் வீச்சுடன் பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் உங்கள் வாசகன் .

கருத்துகள்