நன்றி பாக்கியா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி

நன்றி பாக்கியா வார இதழ் !
அட்டைப்படத்திற்கு கவிதை !
கவிஞர் இரா .இரவி !


குழந்தைகளின் கதாநாயகர்கள்
கன்னியை  வழி மறுக்கின்றனர் !
தலைவன் வந்துவிட்டால்
தவிடுபொடி ஆகிவிடுவார்கள் !

புன்னகை அணியாமல்
புன்னகை மட்டும் அணிந்திருப்பதால்
கொள்ளைக்   கொண்டாள் உள்ளம் !

இதழ்கள் பேசவில்லை ஆனால்
விழிகள் அசைத்துப் பேசுகிறாள்
விழிகள் வழி வழிகிறது காதல் !

சிங்காரி அவள்
சின்னப்  புன்னகையால்
சிதறு தேங்காயாய்
சிதறடித்தாள் என்னை !
--

.

கருத்துகள்