27.7.2016 இன்று இரவு 10 மணிக்கு மதுரை ஹலோ பண்பலை வானொலி கேளுங்கள் .மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நான் எழுதிய கவிதையை "டைரி " நிகழ்ச்சியில் இனிய முகநூல் தோழி செல்வ கீதா அவர்கள் இனிய குரலில் வாசித்து இருக்கிறார்கள் .கேட்டு மகிழுங்கள் .
அரசுப்பணி காரணமாக பெங்களுருவில் இருப்பதால் , அய்யாவின் நினைவிடம் பேக்கரும்பு செல்ல இயவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தேன் .
அவரது பிறந்த நாள் அன்று 15.10.2015 அன்று மதுரையில் இருந்ததால் டொக் பெருமாட்டி கல்லூரி ,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி ,மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 கல்வி நிறுவனங்களில் உரையாற்றினேன் .
அவரது நினைவு நாளான இன்று மதுரையில் இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த எனக்கு எனது கவிதைகள் மதுரை நேயர்கள் கேட்கும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன் .ஆறுதலாக இருந்தது .
.
கவிதையை ஒலிபரப்ப உள்ள மதுரை ஹலோ பண்பலை 106.4, வானொலிக்கும், முதுநிலை அறிவிப்பாளர் , இனிய முகநூல் தோழி ச.செல்வகீதா அவர்களுக்கும் நன்றி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக