மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் !  கவிஞர் இரா .இரவி !



27.7.2016 இன்று இரவு 10 மணிக்கு மதுரை ஹலோ பண்பலை வானொலி கேளுங்கள் .மாமனிதர் அப்துல் கலாம்  அவர்களின் நினைவு  நாளை முன்னிட்டு நான் எழுதிய கவிதையை "டைரி " நிகழ்ச்சியில் இனிய முகநூல் தோழி செல்வ கீதா அவர்கள் இனிய குரலில் வாசித்து இருக்கிறார்கள் .கேட்டு மகிழுங்கள் .


அரசுப்பணி காரணமாக  பெங்களுருவில் இருப்பதால் , அய்யாவின்   நினைவிடம் பேக்கரும்பு செல்ல இயவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தேன் .

அவரது பிறந்த நாள் அன்று 15.10.2015 அன்று மதுரையில் இருந்ததால் டொக் பெருமாட்டி கல்லூரி ,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி ,மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 கல்வி நிறுவனங்களில் உரையாற்றினேன் .

 அவரது நினைவு நாளான இன்று மதுரையில் இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த எனக்கு எனது கவிதைகள் மதுரை நேயர்கள் கேட்கும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன் .ஆறுதலாக இருந்தது . 

.
கவிதையை ஒலிபரப்ப உள்ள  மதுரை ஹலோ பண்பலை 106.4, வானொலிக்கும், முதுநிலை அறிவிப்பாளர் , இனிய  முகநூல் தோழி ச.செல்வகீதா அவர்களுக்கும் நன்றி .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்