மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !



இணையத்தில் உள்ள நான் எழுதிய " என்னவள்" கவிதைகளை  20.7.2016 நேற்று மதுரையில்  உள்ள ஹலோ பண்பலை வானொலியில்  டைரி நிகழ்ச்சியில் இனிய முகநூல் தோழி செல்வ கீதா அவர்கள் வாசித்து இருக்கிறார்கள் .நான் பெங்களுருவில் இருப்பதால் கேட்க இயலவில்லை .

இன்று காலை இனிய நண்பர் மதுரை இலக்கிய பேரவையின் தலைவர்  திரு .சண்முக திருக்குமரன் அவர்கள் அலைபேசி வழி அழைத்துப் பாராட்டினார்கள் .வானொலியில் கேட்டேன் சிறப்பாக இருந்தன என்று பாராட்டினார் .

உடன்  இனிய முகநூல் தோழி செல்வ கீதா அவர்களை அலைபேசியில் அழைத்து நன்றி சொன்னேன் .இணையத்தில் பார்த்தேன் பிடித்து இருந்தது வாசித்தேன் .என்றார்கள் 

மதுரையில் நான் இல்லாத  நேரத்திலும் மிகவும் நான் நேசிக்கும் மதுரையில் என் கவிதை வரிகளில் அறிந்து மகிழ்ந்தேன் .இந்த என்னவள் கவிதை 5.5.2005 அன்று ஒரே நாளில் எழுதிய கவிதைகள். நூலாகவும் வந்துள்ளது .

என்னவளே கவிதைகள் வாசிக்க இணைப்பு   http://www.kavimalar.com/ennavale/index.htm

.

கருத்துகள்