நன்றி . பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி . பாக்யா   வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை !  கவிஞர் இரா .இரவி !

மனதில் இல்லை கவலை
முகத்தில் மலர்ந்தது மகிழ்ச்சி
அகத்தின் அழகு முகத்திலும் !

ஒரு தவளை சிறு இலைகள்
இரு மழலைகள் அருகே
புன்னகை அரசி !

குமரியின் வருகைக்காக
காத்திருந்த குழந்தைகள்
குதூகலம் அடைந்தன !

ஆபாசமில்லாத அழகிய ஆடை
அணிகலன் ஆகின்றது
பெண்களுக்கு !

புன்னகையை விட  சிறந்தது
புன்னகை என்பது புரிந்ததால்
புரிகிறாள் புன்னகை !

கழுத்தில் தங்க நகை அணியாது
இதழில் புன்னகை அணிந்து
பூவாக மலர்த்திருக்கிறாள் பூவை !.

ஆடம்பரமில்லாத அழகு
அனைவருக்கும் பிடிக்கும்
அறிந்திருக்கிறாள் நங்கை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்