பெங்களூரு பாவாணர் பாட்டரங்கின் தலைவர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் தந்த தலைப்பு ! வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !
நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் தந்த தலைப்பு !
வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !
அகல்விளக்கின் வெளிச்சம் இருள் அகற்றிடும்
அறிவொளி வெளிச்சம் மனஇருள் அகற்றிடும் !
விதைகள் பல மரங்களாக வளர்கின்றன
விதைகள் சில மண்ணிலேயே மக்கி விடுகின்றன !
வெளிச்சம் என்பது விதையில் இல்லை
வெளிச்சத்தால்தான் விதைகள் வளர்கின்றன !
விதை இல்லாத பழங்கள் சுவை இருக்கலாம்
வீரிய சத்துக்கள் இல்லாதவை தீங்கானவை !
விதை விருட்சமாவதும் வெம்பி விடுவதும்
விதைத்தவனின் தொடர் பராமரிப்பில் உள்ளது !
அறக்கருத்துக்களை நாளும் பிஞ்சுகளிடம் விதைத்தால்
அன்பாக அறிவாக வளர்ந்திடும் குழந்தைகள் !
என்ன விதைக்கின்றமோ அதுதான் அறுவடையாகும்
எனவே அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம் !
உடன்பாட்டுச் சிந்தனையே வெளிச்ச விதைகள்
உடன் நினைத்த செயல் முடிக்கத் துணைபுரியும் !
பறவைகள் இட்ட எச்ச விதைகளால்தான்
பரந்து விரிந்த பெரிய காடுகள் உருவாகின !
விதை விருட்சமாகத் தேவை வான்மழை
மனிதன் மனிதனாக வாழத் தேவை அன்புமழை !
எவ்வுயிரும் என்னுயிர் என்றெண்ணி இரங்கு
என்றார் வடலூர் வள்ளலார் பெருமான் !
தன்னைப் போலவே பிறரை நேசி என்றார்
தன்னலமற்ற இயேசு பிரான் அவர்கள் !
எதுவாக எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய்
என்றார் அறிவில் சிறந்த விவேகானந்தர் !
உண்மை பேச்சவார்த்தை அகிம்சை வாழ்வியல்
உரைத்தார் ஒப்பற்ற தேசப்பிதா காந்தியடிகள் !
வாழ்வில் வெளிச்சம் பெற உதவுவது
வல்லுநர்கள் கூறும் நல்ல கருத்துக்கள் !
விடியல் வாழ்வில் விளைந்திட உதவுவது
விவேகமானவர்கள் சொல்லும் கருத்துக்கள் !
வெளிச்சம் அளவோடுதான் இருக்க வேண்டும்
வெளிச்சம் அதிகமானால் எதுவும் தெரியாது !
செயற்கை வெளிச்சமிட்டு ஆடம்பரமானவர்கள்
சிறைக்குச் சென்ற வரலாறுகளும் உண்டு !
ஆன்றோர் கருத்துக்களே வெளிச்ச விதைகள்
அனைவரின் உள்ளத்திலும் அறிவொளி பாய்ச்சும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக