தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! தண்ணீருக்கு இரத்தம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

தண்ணீருக்கு இரத்தம் !  கவிஞர் இரா .இரவி !

இமயம் முதல் குமரி  வரை இந்தியா என்றும் 
இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர் என்றும் !

இன்றும் நாம் பாடநூலில் குழந்தைகளுக்கு 
இனிமையாக கற்பித்து வருகிறோம் !

பல நாடுகள் சண்டையின்றி அமைதியாக 
பாயும் நதியைப்  பங்குபோட்டு கொள்கின்றனர் !

ஒரே நாட்டில் இரு மாநில பகிர்வில் சண்டை 
ஓயாத சண்டை தீர்ப்பை மதிக்காது சண்டை !

மனிதநேயம் மனதில் இருந்தால் என்றும் 
மனிதன் ஒருவருக்கொருவர் சண்டையிட மாட்டான் !

மனிதன் விலங்கில் இருந்து வந்தவன் என்பதற்காக 
மனிதன் மிருகமாக மாறுதல் முறையோ ?

பொது சொத்துக்களை தனியார் சொத்துக்களை
பொது இடத்தில எரித்து அழிப்பது முறையோ ?

மனிதனுக்கு அழகு பகுத்தறிவைப் பயன்படுத்துவது 
மனிதன் சிந்திக்காமல் செயல்படுவது  முறையோ ?


யாரும் யாரையும் தாக்குவது என்பது மடமை 
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் உடைமை !

மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் 
மனிதனை அடிப்பது விடுத்து யோசிக்க வேண்டும் !

விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை 
கெட்டுப் போவோர் விட்டுக் கொடுப்பதில்லை !

தண்ணீருக்கு இரத்தம் சிந்துவது முறையோ ?
தனிமையில் யோசித்தால் கிடைக்கும்  விடை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்