தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !

பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
பரவவில்லை மகிழ்ச்சி என்றும் எனக்கு !

பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம் 
படரும் கொடிய தீயே நினைவில் வருகிறது !

பட்டாசு  விபத்தால் உயிரிழந்த பல 
பரிதாபங்கள் நினைவில் வருகின்றன !

பட்டாசுப்   பட்டு பாவம் சிறிய 
பிஞ்சுகள் கூட கருகியதுண்டு !

கோயில் விழாவில் பட்டாசு வெடித்த 
கொடூரங்கள் நினைவில் வருகின்றன !

தீபாவளியன்றே பட்டாசு விபத்தால் 
தீயுக்கு இரையான நிகழ்வு நினைவுக்கு வந்தது !

தீபாவளியன்றே குடியிருந்த கூரையில்
தீப்பிடித்து  குடிசை இழந்தோர் உண்டு !

பட்டாசு செய்யும் தொழிலுக்கு வந்து 
படிப்பை விட்டோர் நினைவுக்கு வருகின்றனர் !

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 
பலியான தொழிலாளர்கள் நினைவு வந்தது !.

ஏழைக்குழந்தை பட்டாசு கிடைக்காமல் 
ஏங்கிய நிலைகளும் நினைவிற்கு வந்தது !

பட்டாசு விபத்தால் ஆதரவற்றோர் ஆன
பல குடும்பங்கள் நினைவில் வந்தன ! 

கரி காசாகுது நெய்வேலியில் 
காசு கரியாகுது தீபாவளியில் நினைவிற்கு வந்தது !

பட்டாசுக்கு  வீணாய் செலவிடும் பணத்தை 
பண்போடு ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கலாம் !

பட்டாசுக்கு  வீணாய் செலவிடும் பணத்தை
பயன் தரும் நூல்கள் வாங்கி மகிழலாம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்