முதல் கவிதையாக பிரசுரம் செய்திட்ட தினமணி கவிதைமணிக்கு நன்றி

முதல் கவிதையாக பிரசுரம்   செய்திட்ட தினமணி கவிதைமணிக்கு நன்றி 



http://www.dinamani.com/specials/kavithaimani/2016/oct/24/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2586740.html?pm=546

ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி

By கவிதைமணி  |   Last Updated on : 24th October 2016 05:23 PM  |   அ+அ அ-  |  
அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல்  நிலவு
அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !

சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்  
சுந்தரியின்   ஒளியை  சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !

வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்
வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !

வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம் 
வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !

இரவில் மட்டுமே  தெரியும் வான் நிலா 
பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !

முழு நிலவாய் என்றும் அழகாய்  ஒளிர்பவள் 
முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !

ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே 
ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !

இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும் 
விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !

சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால் 
சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !

சிக்கி முக்கி  கற்கள் உரசினாள் தீ வரும் 
செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !

மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால் 
மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !

விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு 
வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !

கருத்துகள்