படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

என்னவளே சைவம்  என்றாயே
பிறகு ஏன் அணிந்தாய்
பட்டு ?

மணமாவதற்கு முன்புதான்
மகிழ்ச்சி
நிரந்தரம் !

கூடி விளையாடும்
குமரிகள் கும்மாளம்
தந்தன மகிழ்வு !

ஒருத்தியை
மூவர் தாக்குவதா
செல்லாத தாக்கு !

கொள்ளை போனது உள்ளம்
கன்னியரின் கள்ளமில்லா
சிரிப்பில் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





கருத்துகள்