கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! செழுமை மிகு தமிழுக்கேன் சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் 
அவர்கள் தந்த தலைப்பு !


செழுமை மிகு தமிழுக்கேன் 
சமற்கிருத எழுத்துக்கள் !  கவிஞர் இரா .இரவி !  



இல்லாதவன் கடன் வாங்கலாம் 
இருப்பவன் கடன் வாங்கலாமா ?

சொற்களின் பெட்டகம் களஞ்சியம் தமிழ் 
சமற்கிருத எழுத்துக்கள் தமிழிலில் எதற்கு ?

வேட்டி என்ற அழகான சொல் இருக்க 
வேஷ்டி என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

இராசா என்ற இனிய  சொல் இருக்க 
இராஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

ரோசா என்ற  நல்ல சொல் இருக்க 
ரோஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

இந்து என்ற இனிய சொல் இருக்க 
ஹிந்து என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

செயம் என்ற சொல் செழிப்பாக இருக்க 
ஜெயம்  என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

இராமேசு என்ற சொல் தமிழிலில்  இருக்க 
இரமேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

சுரேசு   என்ற சொல்  தமிழிலில்  இருக்க 
சுரேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

கணேசு என்ற சொல்  தமிழிலில்  இருக்க 
கணேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

சோசப்  என்ற என்ற சொல்  தமிழிலில்  இருக்க
ஜோசப் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

நட்டம் என்ற சொல்  தமிழிலில்  இருக்க
நஷ்டம் என்ற சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

இருபத்தி ஆறு எழுத்துக்கள்  மட்டுமே உள்ள 
ஆங்கிலத்தில் வேறு எழுத்துக்கள் சேர்ப்பதில்லை !

இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள்
இருக்கின்றன இனிமையான தமிழில் !

இன்னும் எதற்கு சமற்கிருத எழுத்துக்கள் 
இனி அவற்றை  தவிர்த்து எழுதுவோம் !

உணவில் கலப்படம் உடலுக்கும் 
உயிருக்கும்  கேடு தரும் கவனம் !

உன்னத மொழியான தமிழில்  கலப்படம் 
ஒப்பற்ற மொழிக்குக்  கேடு தரும் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்