25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !

25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !




எங்கள் திருமணம் நாள் ,மாதம் ,வருடம் மூன்றிலும் 2 வரும் விதமாக 2.2.1992 நடந்தது .வெற்றிகரமான 25 ஆம் ஆண்டு திருமண நாள் . எனது மனைவி ஜெயசித்ராவிற்கு இலக்கிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் இல்லத்தை ஈடுபாட்டோடு கவனித்து வருகிறார்.எங்களது மூத்த மகன்  பிரபாகரன்   M.B.A. முடித்து ,பணி புரிகின்றான் . எங்களது இளைய மகன் கெளதம் B.TECH மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான்.

நான் கவிதை , இலக்கியம் ,தமிழ் என்று அலைந்தாலும் ,பொறுமையாகவும், பெருமையாகவும் மகன்களை நல்லபடி வளர்த்த பெருமை எனது மனைவி ஜெயசித்ராவையே சாரும் .

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்