மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி

http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jan/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2633317.html

-- நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !

மல்லுக்கட்டும்  ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி 

By கவிதைமணி  |   Published on : 16th January 2017 04:27 PM  |   அ+அ அ-   |  
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !
எதற்காக  தடை   செய்கிறார்கள் என்று
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !
உலகமயம் என்ற அரக்கனின்  வேலை
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும்  !
உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும்
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! 
காட்டு விலங்கு அல்ல காளை
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !

தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை  வியந்து
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !
கொட்டக்  கொட்டக் குனிபவன் அல்ல
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !
பொறுமைக்கும் ஒரு எல்லை  உண்டு
பொங்கி எழுந்தால் தாங்க  மாட்டீர்கள் !
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !

கருத்துகள்