பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !
தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது
தனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் !
தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம்
தனித்தமிழ் பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் !
வடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம்
வந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் !
ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம்
உணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் !
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி
நடப்பவைகளை தமிழுக்கு நன்மையாகட்டும் !
தமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ்
தமிழர்களே நல்ல தமிழ் பேசுவோம் எழுதுவோம் !
அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்வோம்
அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி நம் தமிழ் !
ஆலயங்களில் இனி தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்
அந்நியமொழி இனி ஆலயத்தில் ஒலிக்க வேண்டாம் !
உயர்நீதி மன்றத்திலும் இனி தமிழ் ஒலிக்க வேண்டும்
உயரதனிச் செம்மொழி தமிழ் சிறப்புற வேண்டும் !
உயர்கல்விகளும் இனி தமிழில் வர வேண்டும்
உரிய உயர்ந்த இடம் தமிழுக்கு வழங்கிட வேண்டும் !
தாய் மொழியிலேயே அனைத்துக் கல்வியும்
தரமாக வழங்கியதால் சிறந்தது சப்பான் நாடு !
தமிழர் திருநாளாம் தை திங்கள் நன்னாளில்
தமிழர்கள் யாவரும் தமிழை வளர்க்க உறுதி ஏற்போம் !
தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது
தனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் !
தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம்
தனித்தமிழ் பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் !
வடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம்
வந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் !
ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம்
உணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் !
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி
நடப்பவைகளை தமிழுக்கு நன்மையாகட்டும் !
தமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ்
தமிழர்களே நல்ல தமிழ் பேசுவோம் எழுதுவோம் !
அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்வோம்
அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி நம் தமிழ் !
ஆலயங்களில் இனி தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்
அந்நியமொழி இனி ஆலயத்தில் ஒலிக்க வேண்டாம் !
உயர்நீதி மன்றத்திலும் இனி தமிழ் ஒலிக்க வேண்டும்
உயரதனிச் செம்மொழி தமிழ் சிறப்புற வேண்டும் !
உயர்கல்விகளும் இனி தமிழில் வர வேண்டும்
உரிய உயர்ந்த இடம் தமிழுக்கு வழங்கிட வேண்டும் !
தாய் மொழியிலேயே அனைத்துக் கல்வியும்
தரமாக வழங்கியதால் சிறந்தது சப்பான் நாடு !
தமிழர் திருநாளாம் தை திங்கள் நன்னாளில்
தமிழர்கள் யாவரும் தமிழை வளர்க்க உறுதி ஏற்போம் !
கருத்துகள்
கருத்துரையிடுக