ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   கவிஞர் இரா  .இரவி !


சேற்றில் மிதந்தும்
அழுக்காகவில்லை
நிலவு !

களவும் கற்று மற அன்று
களவும் அற்று
மற !

சேற்றில் மலர்ந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !

பணம் சேர்ப்பு
இல்லாத பேய்
இருப்பதாகக் காட்டி !
.
அழிந்தது
நேர்மை
அரசியல் !

முடிக்கலாம்  அதிகவேலை
அதிகாலை எழுந்தால்
சாதிக்கலாம் !

அன்பே சிவம்
சிவன் கரத்தில்
சூலாயுதம் !

காண்பதும் பொய்
சுற்றுவதாகத் தோன்றும்
சுற்றாத சூரியன் ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்