கடலை ! கவிஞர் இரா .இரவி !




கடலை ! கவிஞர் இரா .இரவி !

உடைக்காமல் அவித்தால்
ஒரு ருசி !

உடைத்து அவித்தால்
ஒரு ருசி !

உடைக்காமல் வறுத்தால்
ஒரு ருசி !

உடைத்து வறுத்தால்
ஒரு ருசி !

ஒவ்வொன்றும் ஒரு ருசி !

அதனால்தான்
ருசியான காதல் உரையாடலை
கடலை போடுதல் என்றனரோ ?

கருத்துகள்