பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !



பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

பாவேந்தரைப் போற்றுவோம் !  கவிஞர் இரா .இரவி !

கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்த 
கவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் !

புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர் 
பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் !

பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களை 
பாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர் !

பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து  விழாவில் 
புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தை பெற்றவர் !

பிசிராந்தியார் என்ற நாடக நூலிற்கு 
பாரத சாகித்ய அகாதெமி பரிசுப் பெற்றவர் !

கிறுக்கன் கிண்டல்காரன் என்ற பெயர்களில் 
கன்னித்தமிழ்ப்  படைப்புகள் படைத்து எழுதியவர் !

புதியதோர் உலகம் செய்வோம்  என்று பாடி 
புதியதோர் உலகத்தை பாடலால் காட்டியவர் !

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடி 
தமிழ்ப்பற்றை மனங்களில் விதைத்தவர் !

இருண்டவீடு காவியம் படைத்துக் காட்டியவர்   
இருளை மன இருளை பாடலால் அகற்றியவர் !

இளைஞர் இலக்கியம் கவிதை நூல் வடித்து 
இளைஞர்களை இலக்கியத்திற்கு ஈர்த்தவர் !

எதிர்பாராத முத்தம் கவிதை நூல் வடித்து 
எல்லாக்காதலர்கள் கரங்களில் தவழ வைத்தவர் !

கண்ணகி புரட்சிக் காவியம்  நூல் வடித்து 
கண்ணகி பற்றி உலகிற்கு உரைத்தவர் !

எண்பத்தி நான்கு நூல்கள் வடித்தவர் 
எண்ணிலடங்காத வாசகர்களைப் பெற்றவர் !

பாவேந்தரின் படைப்புகள் தமிழக அரசால் 
பாரே படித்திட நாட்டுடைமையாக்கப் பட்டது !

சகலகலா வல்லவராக வாழ்ந்துக் காட்டியவர் 
சகலரும் விரும்பிடும் பாடல்கள் யாத்தவர் ! 

புவியில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர் மட்டுமே 
புரட்சிக்கவிஞர்  பாவேந்தரைப் போற்றுவோம் ! 

கருத்துகள்