ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !
எடுத்து ஊதும் வரை
அமைதி காத்தது
புல்லாங்குழல் !
வளர்கின்றன
கண்ணுக்குத் தெரியாமலே
வேர்கள் !
வேர் குடித்தது நீர்
பூத்தது பூ
மரத்தில் !
உணர்த்தியது
ஓவியன் ஆற்றல்
ஓவியம் !
பேசுகின்றனர்
கிண்டல் கேலி
நேர்மையாளனை!
உழவனை மட்டுமல்ல
குயவனையும் வாட்டியது
உலகமயம் !
ஏற்றுமதி சுருங்கி
இறக்குமதி பெருகியது
தாராளமயம் !
எங்கும் எதிலும்
நிறைந்து உள்ளன
ஊழல் !
உடல் இங்கு
உள்ளம் அங்கு
வகுப்பறையில் மாணவன் !

கருத்துகள்