என்னவள் ! கவிஞர் இரா .இரவி




என்னவள் ! கவிஞர் இரா .இரவி
நடந்துவரும் நந்தவனம்
சுண்டிஇழுக்கும் சோலைவனம்
 என்னவள் !
அழகிகளும் பொறாமை
கொள்ளும் அழகு
என்னவள் !
வனப்பில்
தோற்றது வண்ணத்துப்பூச்சி
என்னவளிடம் !
அவளின் அளவிற்கு
வேறு யாருக்கும் இல்லை
குரல் இனிமை !
அழகாகின்றது
எந்த ஆடையும்
அவள் அணிந்ததும் !
அகம் வைத்ததால்
அறியவில்லை அகவை
அழகி அவ்வளவுதான் !
கவிதை வழங்கிடும்
 அட்சயப்பாத்திரம்
அவள் முகம் !
நீரின்றி
வாழ்கின்றன மீன்கள்
அவள் விழிகள் !
தேவையில்லை வண்ணம்
இயற்கையில் சிவப்பு
அவள் இதழ்கள் !
பேசாவிடினும்
பார்த்தாலே போதும்
அழகோ அழகு !
நாள் முழுவதும்
ரசிக்கலாம்
நடனமிடும் விழிகள் !
தோற்றது
காந்த விசை
அவள் விழிகளிடம் !
மறந்தது பசி
பிறந்தது மகழ்ச்சி
அவள் வருகை !
ஆயிரம் பேரிலும்
தெரிவாள் தனித்து
ஆயிரத்தில் ஒருத்தி !

கருத்துகள்