என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ! கவிஞர் இரா .இரவி !

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ! கவிஞர் இரா .இரவி !
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து !
பயணப்பட்டு பூமிக்கு வருகிறேன் நான் !
என்னை நீங்கள் வரவேற்காவிட்டாலும் !
என்னை நீங்கள் வீணடிக்காதீர்கள் !
சூரியனின் தயவால் கடலிலிருந்து ஆவியாகி !
சுத்திகரிக்கப்பட்டு நல்ல தண்ணீராய் வருகிறேன் !
முழுவதுமாக என்னை சேகரித்து வைத்தால் !
மூன்று தலைமுறைக்கும் பஞ்சம் வராது !
கல்நெஞ்சம் படைத்த கர்னாடகத்திடம் !
கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது !
மரங்கள் துளிர்க்க நான் உதவுகின்றேன் !
நாங்கள் பூமிக்கு வர மரங்கள் உதவுகின்றன !
மரங்கள் வளர்க்க வேண்டியது கடமை !
மரங்களை வெட்டி வீழ்த்துவது மடமை !
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது உண்மை !
சிதறாமல் சேகரித்தால் வருவது வளமை !
.

கருத்துகள்