துபாயில் ஷோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா! தகவல் இனிய நண்பர் ஹிதாயத் துபாய் !











துபாயில் ஷோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.ஷோபியா அவர்களின் கவிதை நூல் தொகுப்பு " கனலி "  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரை சேர்ந்த இவர் ஷார்ஜாவில் தமிழ்  ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
துபாய் ,அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு.ஜின்னா சர்ப்புதீன் அவர்கள் கலந்துக் கொண்டார்.அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர் யூசுப் தலைமையேற்றார்.திருமதி.ஜெஸிலாபானு,ஆசிப் மீரான் , திரு.கவின்முருகு ,திரு.இளையராஜா ,திரு.சிம்மபாரதி,திரு.சசிக்குமார்,திரு.ஜியாவுதீன் ,திருமதி.சௌமியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தமிழ்க்குஷி.காம் இணைய வானொலியின் தொகுப்பாளர் சுமிதா ரமேஷ்,அபுதாபியைச் சேர்ந்த பெண்கள் வேலை வாய்ப்பு குழுவை நடத்தி வரும் ஜெஸி விக்டர் ,  தமிழ்த்தேர் அமைப்பின் உறுப்பினர்கள் ,நண்பர்கள் ,ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.திருமதி. ரமா மலர்வண்ணன் வரவேற்புரை மற்றும் நன்றியுரை வழங்க ,திருமதி.ஹேமா சிவராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தகவல் இனிய நண்பர் ஹிதாயத்   துபாய் !

கருத்துகள்