ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

எண்ணிலடங்காதவை 
எண்ணம் கவர்ந்தவை 
மலர்கள் ! 

மதித்து ரசிப்பவர்களுக்கு 
மகிழ்வைப் போதிக்கும் 
மலர்கள் ! 

கோபம் கொள்வதில்லை 
ஊடல் கொள்வதில்லை 
மலர்கள் ! 

வரவேற்கின்றன 
வண்டுகளை 
மலர்கள் ! 

தேன் உண்டால் 
தேம்பி அழுவதில்லை 
மலர்கள் ! 

கண் கொள்ளாக் காட்சி 
கண் கவர் மாட்சி 
மலர்கள் ! 

கர்வம் இல்லை 
கொள்ளை அழகு 
மலர்கள் ! 

இல்லவே இல்லை 
போட்டி பொறாமை 
மலர்கள் ! 

கூர்ந்துப் பார்த்தால் 
எல்லாம் அழகு 
மலர்கள் ! 

ரசித்துப் பார்த்தால் 
அழகோ அழகு 
எருக்கம் மலர்கள் ! 

பறக்காமல் 
பட்டாம் பூச்சி 
ஓ மலர் !

கருத்துகள்