21.10.2017 அன்று இலங்கையில் வெளியிடப்பட்ட 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் உலகளவில் 32 நாடுகளைச்சேர்ந்த கவிஞர்களின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள என் கவிதை ! கவிஞர் இரா .இரவி







21.10.2017 அன்று இலங்கையில் வெளியிடப்பட்ட 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் உலகளவில் 32 நாடுகளைச்சேர்ந்த கவிஞர்களின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள என் கவிதை ! கவிஞர் இரா .இரவி !

என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !

உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது
உணவிலிருந்து உடை வரை அந்நியமானது !

இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று !

வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று
வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர் இன்று !

விதை நெல்கள் காணமல் போனது
விதைகள் அயல்நாட்டான் முடிவானது !

இயற்கை விவசாயம் அழிந்து விட்டது
செயற்கை உரங்கள் பெருகி விட்டது !

பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது
பூச்சிகள் பல புதிது புதிதாக உருவானது !

உலகமயம் என்ற பெயரில் வந்தனர்
உலை வைத்தனர் உள்ளூர் தொழில்களுக்கு !

தாராளமயம் என்ற பெயரில் வந்தனர்
தாராளக் கொள்ளை அடிக்கின்றனர் !

புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதுப்புது கொள்ளை அடிக்கின்றனர் !

ஆயுத வியாபாரம் செய்து நம்மிடமிருந்து
அள்ளிச் செல்கிறான் கோடிகளை சிலர் !

அணு உலைகளை தலையில் கட்டி
ஆபத்தில் ஆழ்த்தி கோடிகள் பெறுகிறான் !

திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்த கதையாய்
தேசத்தின் உள்ளே பன்னாட்டுக் கொள்ளையர்கள் !

என் தேசம் !என் சுவாசம் ! என்று உணர்வோம்
இனியாவது விழிப்போம் கொள்ளையரை விரட்டிடுவோம் !
.

கருத்துகள்