உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !

http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/11/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2805994.html

-- 
உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !

உன் குரல் கேட்டால் நான் திரும்பவும் 
உயிர்த்தெழுவேன் உயரம் தொடுவேன் !

அலைபேசியில் ஒலி வரும்போதெல்லாம் 
அழைப்பது நீயோ என்று எடுப்பேன் !

எடுக்கும் ஒவ்வொரு  முறையும் ஏமாற்றமே
எனக்கு மிஞ்சியது ஏக்கமே எஞ்சியது  !

நான் உன்னை அழைத்துப்  பேசலாமென்றால் 
நின் எண் என் வசம் இல்லை  ஆனால் !

உன்னிடம் உண்டு எனது எண்
நீ நினைத்தால் ஒரே ஒரு முறை !

மறக்க நினைத்தாலும் முடிவதில்லை 
மனதில் நினைவுகள் வந்து மோதுகின்றன !

மூச்சு உள்ளவரை உன் நினைவு 
மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் !

பசுமையான நினைவுகள் எனக்கு 
பகலிலும் வந்து போகின்றன !

கல் நெஞ்சம்  கேள்விப் பட்டதுண்டு 
கள்ளி உனக்கோ இரும்பு நெஞ்சம் !

இரும்பு கூட தீயிலிட்டால் வளையும்
என்னவளே நீ எப்போது வளைவாய் !   

என்றாவது நீ அலைபேசியில் அழைப்பாய்
என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு  !

இரக்கம் கொண்டு என்னை அழைக்கலாம்
ஒரே ஒரு முறை அழைத்திடுவாய் !

ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால் 
உள்ளமும் உடலும் பூரிப்பு அடையும் !
.

கருத்துகள்