கெட்ட பேர் வரும்!



கெட்ட பேர் வரும்!
நம் கொள்கைப்படி காரியம் செய்வதில் நமக்குக் கெட்ட பேர் வருமே என்று பயப்படக் கூடாது. நாம் கெட்ட காரியம் செய்யத் தலைப்படக் கூடாதே தவிர, மற்றவர் என்ன சொல்வார் என்று சிந்திக்கக் கூடாது. நம்மைப் பற்றி மற்றவர் போற்ற வேண்டுமென்றும் கருதக் கூடாது. நம் தொண்டின் பயனாய் ஏற்படும் நலனைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அதுதான் நமது இகழ்ச்சிக்கும், புகழ்ச்சிக்கும் உண்மைக் காரணமானதாகும்.
-பெரியார்..
(குடிஅரசு 27.10.1945)

கருத்துகள்